For Daily Alerts
Just In
இலங்கை நீதிமன்றம் விடுதலை: 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுதாயகம் திரும்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 13 மீனவர்களும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, படகு ஓட்டுனர்கள் 4 பேரைத் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 17 மீனவர்களும், கச்சத்தீவு அருகே இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களை அதிகாரிகள் மண்டபம் பகுதிக்கு அனைத்து வந்து பின்னர் அவரவரர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
Comments
admk jaya chennai astrology ranking Ajith madhavan simran kural art gallery florals rajni alexa rating muslins joyhika gowthamijamat ex dmk
Story first published: Tuesday, September 30, 2003, 5:30 [IST]