குவாரிகளை கட்டுப்படுத்த ஜெ. முடிவு: அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் விவகாரம், வாரத்துக்கு 6 நாள்வேலையை அமலாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள மணல் மற்றும் கல் குவாரிகளை அரசுடமையமாக்கும் திட்டம் குறித்தும்விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குவாரிகள் என்ற பெயரில் பெரிய மலைகளையே வெட்டி எடுத்து கோடிக்கணக்கில் குவித்து வருகின்றனர் பணமுதலைகளும் காண்ட்ராக்டர்களும். பெரும்பாலான குவாரிகள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை.
குவாரிகளில் வெட்டப்படும் கிரனைட் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை விற்க அனுமதிப்பதால் அரசுக்கு சிறயஅளவில் கிடைக்கும் வரி தவிர வேறு எந்த லாபமும் இல்லை. குவாரிக் கும்பல்கள் மட்டுமே கொள்ளை லாபம்அடித்து வருகின்றன.
இதைத் தடுக்கவும் இவற்றை அரசுடமையாக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் மத்தியஅமைச்சர் கணணப்பனைக் கைது செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.