மழை நீரை சேமிக்க 13 மாவட்டங்கள் முழு அளவில் தயார்!
சென்னை:
வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதி செய்யும் பணியை 13 மாவட்டங்கள் முழுமையாகமுடித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக் கெடு முடிந்துள்ள நிலையில் தற்போது 13 மாவட்டங்களில் மட்டும்மழை நீர் வடிகால் கட்டமைப்பு முழுமையாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருச்சி, சேலம், திருவள்ளூர், ஈரோடு, தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், வேலூர்,விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது முழுமையாக மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு 100 சதவீத வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 99.4 சதவீத வீடுகளிலும், திருவண்ணாமலை, தர்மபுரியில் 99.2 சதவீத வீடுகள்,கட்டடங்களில் மழை நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் 90 சதவீதத்திற்கு மேல் பணிகள்முடிந்துள்ளன.
தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் வரும்வட கிழக்கு பருவ மழையை பெருமளவில் வீணடிக்காமல் தவிர்க்க முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.