கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்
சென்னை:
மதுரை அருகே உள்ள மேலூர் அரசுக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை போலீஸார் தாக்கியது குறித்துவிசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனின் அறிக்கை இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
கமிஷன் தலைவர் நீதிபதி சுப்ரமணியம் இதனை இன்று ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
மதுரை மேலூர் அரசினர் கல்லூரியில் கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்அமைதியான முறையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்த மாணவர்கள் மீது போலீஸார் பயங்கரத் தாக்குதல்நடத்தினர். வகுப்பறைகளுக்குள்ளும் புகுந்து மாணவிகளையும் ஊனமுற்ற மாணவ, மாணவிகளையும் கூடகாட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர்.
மேலும் வகுப்பறைகளையும் போலீசார் சேதப்படுத்தினர். மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்துவிரட்டப்பட்டனர். தமிழகத்தையே இந்தச் சம்பலம் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. இதைக் கணடித்து மாநிலம்முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து சம்பவம் விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சுப்ரமணியம் தலைமையில் விசாரணைக்கமிஷனை அரசு நியமித்தது.
நீதிபதி சுப்ரமணியம் தனது விசாரணையை முடித்து இன்று அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம்ஒப்படைத்தார்.