For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று முதல் மண் அள்ளுகிறது தமிழக அரசு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்க தனியாருக்கு தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதையடுத்து, இன்று முதல்(ஞாயிற்றுக்கிழமை) அரசே மணலை அள்ளி விற்கும் பணியை மேற்கொள்கிறது.

தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகள், கால்வாய்ப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் சுற்றுச் சூழல்பாதிக்கப்படுவதாகவும், மணல் திருட்டு அதிக அளவில் நடப்பதாகவும், மணல் திருட்டை தடுக்கச் செல்லும்அதிகாரிகள் லாரி ஏற்றிக் கொள்ளப்படுவது அதிகத்துள்ளதாலும், தமிழகம் முழுவதிலும், மணல் அள்ளவது,விற்பது ஆகியவற்றை அரசே மேற்கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து இன்று முதல் மணல் அள்ளும் பணியை தமிழக அரசின் பொதுப் பணித்துறைமேற்கொள்ளவுள்ளது. அள்ளப்படும் மணல் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 95 மையங்களில் விற்பனைக்குவைக்கப்படும்.

பொது மக்கள் இந்த மையங்களில் ஒரு லாரி லோடு மணலை ரூ. 1,000 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

சென்னையில் திருவள்ளூர் மாவட்டம் கனகாம்பாள் சத்திரம், மண்டலி ஆகிய இரு இடங்களில் மணல் விற்பனைசெய்யப்படும்.

மற்ற மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை அணுகி எங்கு மணல் விற்கப்படும்என்பதை அறிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X