கோமள வல்லியின் 30 வருட வரலாறு குறித்து மேடையில் விவாதிக்க தயார்: இளங்கோவன்
சென்னை:
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர அய்யர் மீது நடந்த தாக்குதல் மிகவும் அநாகரீகமானதுஎன்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு விழாவில் தொகுதி எம்.பியை மேடையில் வைத்துக்கொண்டு அநாகரீகமாகப் பேசியுள்ளார் ஜெயலலிதா.
மேலும் எங்களது கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் ஜெயலலிதா அவதூறாகப் பேசியுள்ளார். சோனியாகாந்தியை இழுத்து வந்து என்றெல்லாம் வார்த்தையைப் பிரயோகித்துள்ளார்.
சோனியா காந்தியை சவாலுக்கு அழைத்ததுபோல, இந்த கோமள வல்லியையும் (ஜெயலலிதாவை) மேடைக்குஅழைத்து வந்து, அவரது 30 ஆண்டு கால வரலாற்றை விவாதிக்க நாங்களும் தயாராகவே உள்ளோம்.
மேடைக்கு வர கோமள வல்லி தயாரா என்று சவால் விடுகிறேன் என்றார் இளங்கோவன்.
புதுவை போலீஸ் வழக்குப் பதிவு:
இதற்கிடையே மணிசங்கர அய்யர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வன்முறைச் சம்பவம் நடந்த இடம் புதுவை மாநிலத்தின் எல்லைக்குள் வருவதால், இது குறித்து வழக்குப் பதிவுசெய்ய அம் மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருமலைராயன்பட்டனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணிசங்கர அய்யரை சந்தித்தகாரைக்கால் பகுதி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸ்டான்லி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.அவரிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த அடையாளங்களை அய்யர் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால் மணிசங்கர அய்யர் தொடர்ந்து காரைக்காலிலேயேதங்கியுள்ளார்.