For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைப்பூசம்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தைப்பூசத்தையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் மிகக் கோலாகலமான விழா நடந்தது. ஆலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை வழிபட்டனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேங்களும், ஆராதனைகளும் நடந்தன. பின்னர் லட்சக்கணக்கானோர் வடம் பிடிக்க தேரோட்டமும் நடந்தது.

காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்காணோர் பாத யாத்திராைக பழனி வந்தனர்.

பல நாடுகளில் இருந்தும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்று முருகனின் மூன்றாம் படை வீடான திருவாவின்குடியில் பால வேலாயுத சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.

இதே போல திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் ஆகிய முருகனின் படை வீடுகளிலும் மிகக் கோலாலகமாக தைப்பூசம் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கானோர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விஸ்வரூப தீபாராதனைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து முருகப் பெருமானின் அருள் பெற்றனர். பின்னர் முருகன் மயில்வாகனத்தில் எழுந்தளிரு வீதி வலம் வந்தார்.

தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தைப்பூச விழாவையொட்டி முருகனில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X