தூத்துக்குடி அருகே வேன்-லாரி மோதல்: 6 பேர் பலி- 19 பேர் படுகாயம்
தூத்துக்குடி:
எட்டையபுரம் அருகே வேன் மீது மீன் ஏற்றி வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியல் அதில் பயணம் செய்த 6பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 8 படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கதிரேசன். சிவராத்திரியை முன்னிட்டு சிவகாசியில் உள்ள வீரநாகம்மாள் கோவிலில்தனது மகன் பிரவீனுக்கு (3) மொட்டை போட தனது குடும்பம், உறவினர்கள் உள்பட 25 பேருடன் அதிகாலைவேனில் கிளம்பினார்.
இன்று காலை 6 மணியளவில் நக்கலாகோட்டை விலக்கு என்ற இடத்தில் இந்த வேன் சென்று கொண்டிருந்தபோதுஎதிரே மீன் தொழிற்சாலைக்குச் சொந்தமான ஐஸ் ஏற்றிய லாரி படு வேகத்தில் வேன் மீது மோதியது. இதில் வேன்டிரைவர் முருகன் (25), நாகம்மாள் (60), சுப்பையா (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
குழந்தை பிரவீன், சுந்தரம் (50), செல்வகணேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் லாரி டிரைவர் உள்பட மேலும் 19 பேர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசுமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications