அடடா...: விவசாயிகளுக்கு ஜெ தாராளம்- கூட்டுறவு கடன்களுக்கு அபராத வட்டி ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் காலத்து சலுகைகளின் அடுத்த கட்டமாக அரசிடம் விவசாயிகள் வாங்கிய ரூ. 250 கோடி அளவிலானகுறுகிய காலக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால கட்டத்தை நீட்டி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பலனடைவர். அத்தோடு இந்த 2 லட்சம் விவசாயிகளும் மீண்டும்தங்களது அடுத்த சாகுபடிக்காக அரசிடம் கடன் உதவி பெறவும் வழி ஏற்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக ரூ. 20கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
இது தவிர கூட்டுறவு வீட்டு வசதிக் கழகங்களிடம் கடன் வாங்கிவிட்டு அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாவர்கள்மீது விதிக்கப்பட்ட அபராத வட்டியையும் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். இதனால் சுமார் 7 லட்சம்பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ. 125 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications