நாடாளுமன்றத் தேர்தல் ஜெ. அரசுக்கு சாவு மணி: சோனியா
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அதிமுக ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போகிறது என காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறினார்.
சென்னைத் தீவுத் திடல் மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில்பேசுகையில்,
எனது குடும்பத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் மிகப் பெருமையாகப் பேசினார் அரசியல் ஞானிகருணாநிதி. அதற்காக அவருக்கு நன்றி. தமிழக மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும்அன்பை நான் அறிவேன்.
இந்தியாவின் மகத்தான தலைவராக காமராஜர் விளங்கினார். பெரியாரும் அண்ணாவும் கண்டகனவுகளை தான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றினார் காமராஜர்.
மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியை அமைத்த டாக்டர்கருணாநிதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டணி நிலையாகவும், உறுதியாகவும் தொடர்ந்து செயல்படும். அதற்கேற்ற வகையில் காங்கிரஸ்கட்சியின் அணுகுமுறையும் இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதா அரசுக்குசாவு மணியாக அமையும். தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது அதிமுக அரசு. அத்தோடு மட்டுமல்லாது, பாஜக ஆட்சியின் கரங்களிலிருந்து நாட்டை விடுவிக்கவும் இந்ததேர்தல் முடிவு உதவும்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் எந்தத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. காவிரி வறண்டுகிடக்கிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஜெயலலிதாவின் பிடிவாதம் தான்காரணம்.
மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூட இந்த அரசால் முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றி மக்களின் தாகம் தீர்ப்போம் என உறுதியளிக்கிறேன் என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications