பதர் சயீதுக்கு மீண்டும் வக்பு வாரிய பதவி
சென்னை:
தென் சென்னை மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற பதர் சயீதுக்கு மீண்டும் வக்புவாரிய உறுப்பினர் பதவி அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வக்ப் வாரிய தலைவியாக இருந்தவர் பதர் சயீத். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தென் சென்னைதொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். இதற்காக அரசுப் பதவியான வக்பு வாரியத் தலைவிபதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், பதர் சயீத் மீண்டும் வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.விரைவில் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதில் பதர் சயீத் மீண்டும் தலைவியாக தேர்வுசெய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதேபோல, மத்திய சென்னையில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் பாலகங்கா, தேர்தலுக்கு முன்தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்து வந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவருக்கும் மீண்டும்பதவி கிடைக்குமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications