குட்டி சாமியார் தொடர்ந்து கண்ணாமூச்சி
சேலம்:
சேலம் குட்டி சாமியார் ஸ்ரீஹர பரணிதர சுவாமிகள் திடீரென்று மாயமாகியுள்ளார். அவரைப் பற்றி வரும்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில காலம் வேறு ஊரில் தங்கியிருப்பார் என்று அவரது சிஷ்யகோடிகள் கூறியுள்ளனர்.அதன்படி அவரை ஒரு காரில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஒரு சிலரும், சேலத்தில் இருந்து150 கி.மீ. தூரத்தில் உள்ள மூக்கனூர் சிவன் கோவிலில் தங்கி இருக்கிறார் என்று ஒரு சிலரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே குட்டிசாமியாரின் பெற்றோருக்கும், இப்போது அவரைப் பாதுகாத்து வருபவர்களுக்கும் இடையேசமரச பேச்சு வார்த்தை நடந்ததாகவும், இந்தப் பேச்சு வார்த்தையில் சாமியாரின் பெற்றோர்களால் அவருக்குஇனிமேல் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
குட்டி சாமியாருக்காக பெரிய அளவில் ஆசிரமம் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் அவரது சிஷ்யர்கள் தீவிரமாகஇறங்கியுள்ளனர். இதற்கு நிலம் தர பலர் முன் வந்துள்ளனர். ஏற்காடு மலை அடிவாரம் அல்லதுஅயோத்தியாப்பட்டணத்தில் இந்த ஆசிரமம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்காக சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் நிதி திரட்ட முடிவுஎடுத்துள்ளதாகத் தெரிகிறது.