For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸை கைது செய்ய வன்னியர் சங்கம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இறங்கியுள்ளார். எனவேஅவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்க தலைவர் ஏ.கே.நடராஜன்கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர் நடராஜன், பாஜகவைச் சேர்ந்த தீரன், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன்ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்முயற்சியில் ராமதாஸ் இறங்கியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசை கலைக்க அவர் நினைக்கிறார்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நடிகர் விஜயகாந்த்துக்கு எதிராக வன்முறையை அவர் தூண்டி விட்டுள்ளார். எனவேஇதற்குக் காரணமானவர்களான ராமதாஸ் உள்ளிட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

வன்னியர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். ஆனால்ராமதாஸுக்கு அதைப் பற்றிக் கவலைப்படக் கூட நேரமில்லை. அவரது இப்போதைய கவனமெல்லாம் தனதுகுடும்பத்தை எப்படி வளர்ப்பது என்பதில்தான் உள்ளது. குடும்ப நலனில்தான் அவர் தீவிர அக்கறை காட்டிவருகிறார் என்றனர் மூன்று தலைவர்களும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X