For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை உயர் நீதிமன்றம்: 24ம் தேதி திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளை ஜூலை 24ம் தேதி திறக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 17ம் தேதி திறக்கப்படும் என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்வேங்கடபதி தெரிவித்திருந்தார்.

மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் திறப்பு விழா பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் மதுரை மற்றும் தென் மாவட்ட வழக்கறிஞர்கள் அதிருப்தியடைந்து கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம்,நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் வேங்கடபதி வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டியுடன்நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஜூலை 17ம் தேதி மதுரை கிளை திறப்பு விழா நடைபெறும். அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஆர்.சி.லகோட்டி, மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனத் தெரிவித்திருந்தார்.

இச் செய்தியை, மதுரையில் உண்ணாவிரதம் இருந்து வந்த வழக்கறிஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள்வழங்கியும் இதைக் கொண்டாடினர்.

இந் நிலையில் திறப்பு விழா 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டெல்லியில் வந்த அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லகோட்டி 17ம் தேதி பிற நிகழ்ச்சிகளுக்குத் தேதிகொடுத்துவிட்டதால், தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X