விம்பிள்டன்: 3-வது சுற்றில் செரீனா; கோரியா தோல்வி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்குமுன்னேறியுள்ளார்.
2-வது சுற்று ஆட்டத்தில் செரீனா 6--0, 6--4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டெபானி போர்ட்ஸைத்தோற்கடித்தார்.
அதே நேரத்தில் பிரெஞ்ச் ஒபன் சாம்பியன் அனல்டிசியா மிஸ்கினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவீராங்கனையானை அமி பிரேஸியரிடம் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால்போட்டித் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆடவர் பிரிவில் அமெரிக்காவின் ஆன்டி ராடிக் வெற்றி பெற்றுள்ளார். லேடன் ஹூவிட் (ஆஸ்திரேலியா),இவானிசெவிக் (குரோஷியா), டாமி ராப்ரிடோ (ஸ்பெயின்), கார்லஸ் மோயா (ஸ்பெயின்), செபாஸ்டின்குரோஸ்ஜின் (பிரான்ஸ்), தாமஸ் ஜோகன்சன் (ஸ்வீடன்), டேவிட் ஃபெரர் (ஸ்பெயின்) உள்ளிட்ட முன்னிலைவீரர்கள் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அர்ஜென்டீனா வீரர் கில்லர்மோ கோரியா 4--6, 6--3, 6--3,6--4 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் புளோரியன் மேயரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
2வது சுற்றில் பயஸ், பூபதி ஜோடிகள்
விம்பிள்டன் டென்னிஸில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக். குடியரசின் டேவிட் ரிகிள்ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் சுற்று ஆட்டத்தில் இந்த ஜோடி இத்தாலியின் பிராசியாலி,காலிம்பெர்டி ஜோடியை 7--5, 6--7, 6--3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
அதே போல் மகேஷ் ஸபதி, பெலாரஸின் மாக்ஸ் மிரின்யி ஜோடி 6--3, 6--4 என்ற நேர் செட்களில் ஹிக்கம் அராஸி,ஜோஸுவா ஈகிள் ஜோடியைத் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.