விஜயகாந்த் ரசிகர்களுடன் சமாதானம்: பாமக
சென்னை:
நடிகர் விஜயகாந்த் ரசிகர்களுடன் எந்தவித மோதலிலும் ஈடுபட வேண்டாம் என பாமக தலைவர் ஜி.கே.மணிகட்சித் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் குறித்து விஜயகாந்த் கருத்துத்தெரிவிக்கப் போக அது பாமக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வட மாவட்டங்களைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் ஆங்காங்கே விஜயகாந்த் உருவ பொம்மை எரிப்பிலும், மன்றபோர்டுகளை உடைப்பதிலும், ரசிகர்களைத் தாக்குவதிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு விஜயகாந்த் ரசிகர்களும்சரியான பதிலடி தந்தனர்.
அதேசமயம், விஜயகாந்த், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால்தான்விடுவோம், இல்லாவிட்டால் அவரது ஒரு படத்தையும் தியேட்டரில் வெளியிட விட மாட்டோம் என்று பாமகவைச்சேர்ந்த முக்கிய தலைவர்கள் முழங்கி வந்தனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் கூட்டத்தை வருகிற ஜூலை 1ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளார் விஜயகாந்த்.
இந்தச் சூழ்நிலையில் பாமக திடீரென தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பான கட்சி.பல்வேறு மக்கள் நல விரோதப் பிரச்சினைகளான மதுக் கடை எதிர்ப்பு, கல்விக் கட்டண உயர்வு, குடிநீர்ப்பற்றாக்குறை பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் பாமக உள்ளது.
எனவே பாமக தொண்டர்கள் விஜயகாந்த் ரசிகர்களுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். விஜயகாந்த்தின் பேச்சு தேவையில்லாத ஒன்று, மிகவும் கடுமையானது. இதுதொடர்பாக கோபம்கொண்டுள்ள பாமக தொண்டர்களின் உணர்வுகளை கட்சித் தலைமை மதிக்கிறது.
இருப்பினும், இந்த சவாலை அரசியல் ரீதியாக சந்திப்போம். எனவே தொடர்ந்து எந்தவிதத்திலும் போராட்டத்தில்ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜி.கே.மணி.
விஜயகாந்த் ரசிகர்களுடான மோதலில் திடீரென பாமக இறங்கி வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சயத்தைஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களும் சமாதானம்:
ஜி.கே.மணியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விஜய்காந்த் ரசிகர்கள் யாரும் பாமகவினருக்கு எதிரானசெயல்களில் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் மாநில ரசிகர் மன்ற செயலாளர் ராமு வசந்தன் தெரிவித்துள்ளார்.