விம்பிள்டன்: 4வது சுற்றில் பெடரர், கேப்ரியாட்டி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸில் நடப்புச் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் மற்றும் முதல் நிலை வீராங்கனை ஜெனிபர்கேப்ரியாட்டி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
விம்பிள்டனில் எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டங்கள் நடத்தும் வழக்கம் இல்லை. ஆனால் இம் முறைதொடர்மழை காரணமாக ஆட்டங்கள் தடைபட்டதால் அவற்றை ஈடுகட்ட நேற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
விம்பிள்டன் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
நேற்றைய ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 6--3, 6--4, 6--3 என்ற செட்களில் ஸ்வீடன் வீரர்தாமஸ் ஜோகன்சனைத் தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆண்டி ரோடிக் 6-3, 7-6(6), 7-6(1) என்ற செட்கணக்கில் டெய்லர் டென்ட்டை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டி 7--5, 6--1 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீராங்கனைநதாலி டெஸியைத் தோற்கடித்தார். வேறொரு ஆட்டத்தில் ரஷியாவைச் சேர்ந்த நதியா பெட்ரோவா 7--6, 6--2என்ற செட்களில் உக்ரைன் வீராங்கனை தாதியானாவை வீழ்த்தினார்.