யூரோ 2004: நாளை இறுதிப் போட்டி
போர்ட்டோ:
யூரோ 2004 கால்பந்தாட்டத்தின் அரை இறுதியில் 1--0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி கிரீஸ் அணிஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. யூரோ கால்பந்தாட்ட வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக கிரீஸ்அணி இப்போதுதான் தகுதி பெற்றுள்ளது.
முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் ஹாலந்து அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.இரண்டாவது அரை இறுதிப்போட்டி போர்ட்டோ நகரில் நடந்தது. இதில் செக் குடியரசுடன் -கிரீஸ் அணிமோதியது.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் பல கோல் வாய்ப்புகளை நழுவ விட்டனர். இந்தகால்பந்தாட்டத் தொடரில் கதாநாயகன் அந்தஸ்து பெற்றிருக்கும் செக் குடியரசின் மிலன் பரோஸ் கோல்அடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயின.
ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் கூடுதல் நேரம் தரப்பட்டது. கூடுதல்நேரம் முடியும்போது கிரீஸ் அணி கார்னர் வாய்ப்பு மூலம் கோல் அடித்தது. வாசிலியோஸ் அடித்த பந்தைடிரைனோச் டெல்லிஸ் தலையால் முட்டி கோல் ஆக்கினார்.
இதன் மூலம் கிரீஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை லிஸ்பன் நகரில்நடைபெறும் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல்லுடன் கிரீஸ் மோதுகிறது. போர்ச்சுகல் அணியும் முதன் முறையாகஇறுதிப்போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.