விஜயகாந்தை அரசியலுக்கு வரவேற்கும் கண்ணப்பன்
சென்னை:
நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதும், கட்சி தொடங்குவதும் தவறில்லை என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் கண்ணப்பன் கூறினார்.
இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள் அந்த கட்சிக்கு பெரிய பலனை தரப்போவதில்லை.
மக்கள் பிரச்சினைகள் குறித்து நடிகர் விஜயகாந்த் பேசுவதும், அவர் அரசியல் கட்சி தொடங்குவதும் தவறில்லை.ஒரு அரசியல் கட்சி தலைவரான பிறகுதான் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து சொல்ல முடியும்.
கபினி அணை நிரம்பியதால்தான் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு சிலர் நாங்கள்தான்காவிரி தண்ணீரைப் பெற்றுத் தந்தோம் என்பது போல் பேசி வருகிறார்கள்.
கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களை பதவி விலகக் கோருவது தவறு. ஒரு கட்சிஆளும் கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடுவது சாதாரணமாகி வருகிறது. எனவேதண்டனை பெற்றவர்களை மட்டுமே நீக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வீசிய பெரிய அலையிலும் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு சுமார்10 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது மக்கள் கூட்டணியை வலுப்படுத்தமுயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று கூறினார்.