For Daily Alerts
Just In
தமிழகத்திற்கு 14 டிஎம்சி தந்துள்ளோம்: தரம்சிங்
குல்பர்கா:
தமிழகத்திற்கு ஜூன் மாதம் 14 டிஎம்சி தண்ணீர் காவிரியில் திறந்துள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்
கூறியுள்ளார்.இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் குல்பர்கா நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர்மன்ற இடைக்கால ஆணையின்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.14 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் தமிழகத்திற்கு 14 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டுள்ளோம். எனவேகூடுதலாகவே காவிரியில் தண்ணீர் தரப்பட்டுள்ளது என்றார் தரம்சிங்.
கபினி அணை நிரம்பியதாலும், மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததாலும்தான் கர்நாடகம் இந்த அளவுக்குதண்ணீர் திறந்து விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, July 5, 2004, 5:30 [IST]