இன்பத்தமிழனை இழுத்துவிட்ட தாமரைக்கனி !
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தனது பெயரை தேவையில்லாமல் பயன்படுத்திய தாமரைக்கனி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரதுமகனும், இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
இந் நிலையில் தாமரைக்கனியின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப் போட்டுள்ளனர். இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை போக்கக் கோரி பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தாமரைக்கனியும் பங்கேற்கிறார். இதில் அமைச்சர் இன்பத்தமிழனும் கலந்து கொள்வார்என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இன்பத்தமிழன் அவசரமாய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனதுபெயைர தேவையில்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இழுத்து விட்டுள்ளார் தாமரைக்கனி.உள்நோக்கத்துடன் (பதவி பறிபோகட்டும் என்பதற்காக) அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
இந்தச் செயலுக்காக தாமரைக்கனி பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும்என்பதற்காகவே எனது பெயரை சுவரொட்டிகளில் போட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
இதற்கிடையே உண்ணாவிரதத்தில் அதிமுகவும் பங்கேற்கும் என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியதாகதாமரைக்கனியின் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.