திருக்குறள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு !
டெல்லி:
திமுக எடுத்த முயற்சிகளையடுத்து திருக்குறள் நூலின் ஆங்கிலப் பிரதியை அச்சிடுவதற்கு விதித்திருந்த தடையைமத்திய அரசு நீக்கியுள்ளது.
பாஜக ஆட்சிக் காலத்தில் இந்துத்துவாவை முன்னிருத்தி, தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் பல்வேறுநூல்களை அச்சிடும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தது.
இந் நிலையில், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் மத்திய மனித வள அமைச்சகம், தேசிய கல்வி மற்றும் ஆய்வுமையத்தின் பணிகளை முழுமையாக மறுபரிசீலனை செய்து, சில புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்கஉத்தரவிட்டது. அதில் ஒன்று திருக்குறள்.
திருக்குறளில், மதம் சார்ந்த வாசகங்கள் இருப்பதாகக் கூறிய மத்திய மனித வள அமைச்சகம், நூலை முழுமையாகஆய்வு செய்த பின்னர் அச்சிடுமாறு தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
திருக்குறள் குறித்து துளியும் தெரியாத சில வட இந்திய அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு கடும்கண்டனம் எழுந்தது.
இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், மனித வள மேம்பாட்டுத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதையடுத்து தடையை உடனே நீக்கி சிங் உத்தரவிட்டார்.
திருக்குறள் தவிர, பிரபல காங்கிரஸ் தலைவரான கரண்சிங் எழுதிய வேதாந்த நூல் விதிக்கப்பட்ட தடையும்நீக்கப்பட்டுள்ளது.