சுயநிதி கல்லூரிகள் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையைப்பின்பற்ற வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுப்பிரமணி கமிட்டி விதித்த ஒன்பது நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி சுயநிதி பொறியியல் கல்லூரிகளின்கூட்டமைப்பு, அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தல் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் கூறியதாவது:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையைப்பின்பற்ற வேண்டும் என்ற சுப்பிரமணி கமிட்டியின் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் பெரும்பான்மை சமூகத்தவர் நடத்தும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்மாணவர்களைச் சேர்க்கும் போது அரசின் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற சுப்பிரமணிகமிட்டியின் நிபந்தனை ஏற்கப்படுகிறது.
சிறுபான்மையினர் நடத்தும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களைச்சேர்க்கும்போது இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றத் தேவையில்லை. 70 சதவீத இடங்களில் அவர்களதுசமூகத்தைச் சார்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். நிரப்பப்படாத இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில்மாணவர்களை அரசு சேர்க்கும்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வின் வினாத்தாளைப் போலவே சுயநிதி பொறியியல்கல்லூரிகளின் வினாத்தாளும் இருக்க வேண்டும் என்று சுப்பிரமணி கமிட்டி விதித்த நிபந்தனை ரத்துசெய்யப்படுகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் அவுட் ஆகிவிட்டால், அத் தேர்வுமுழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அதன்பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வின்அடிப்படையிலேயே சுயநிதி கல்லூரிகள் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனைஏற்கப்படுகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வை ஜூலை மாதம் 24, 25-ம்தேதிகளில் நடத்தி, தேர்வு முடிவுகளை 5-ம் தேதிக்கு முன்னதாக வெளியிட வேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிபதிமுருகேசன் கூறினார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவர் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில்அதன் தலைவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நாளை விசாரிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications