கர்நாடகத்தின் வழியில் பஞ்சாப்: ஜெ. தாக்கு
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பிரச்சினை இருப்பதாக சிலர் திட்டமிட்டு செய்தி பரப்பிவருவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கன்னியாகுமரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெறவும், நெல்லை மருத்துவக் கல்லூரியில்கூடுதலாக 50 சீட்களையும் பெறவும் மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இவற்றை நிச்சயம் பெறுவோம். கடந்த பல ஆண்டுகளாகவே அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிவழங்குவதில் இந்திய மருத்துவக் கவுன்சில் பாரபட்சம் காட்டுகிறது. இப்போது இதில் அரசியலும் சேர்ந்துள்ளது.இதில் அதிமுக அரசு மீது குறை கூறுவதில் நியாயம் இல்லை.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பிரச்சனை இருப்பதாகவும், குழப்பம் நிலவுவதாகவும் சிலர்திட்டமிட்டே பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். தற்போதைய குழப்பங்களுக்கு அவர்கள்தான் காரணம்.
சட்லெஜ், ரவி, பியாஸ் நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பஞ்சாப் மாநிலம் ரத்து செய்துள்ளது கடுமையாககண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
பிரதமரால் இந்தப் பிரச்சினையில் தீர்வு காண முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரிஅதன்படி நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
அன்று கர்நாடகம் இதேபோல நடந்தது, இன்று பஞ்சாப் நடந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் கீழ் நடக்கும்கடமை இரு மாநிலங்களுக்கும் உண்டு. சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் அராஜகமாகநடந்து கொள்ளக் கூடாது. கர்நாடகம் காட்டிய வழியில்தான் இன்று பஞ்சாப் நடந்து கொண்டுள்ளது என்றார்ஜெயலலிதா.