For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையை புறக்கணிக்க ஜ.மு.கூட்டணி முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை 10 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்துகூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதென திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

சட்டசபை செயலாளர் ராஜாராமன் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திமுகதலைவர் கருணாநிதி, திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.

பின்னர் திமுக பொதுச் செயலாளரும், சட்டசபை திமுக தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம்பேசுகையில், பட்ஜெட் கூட்டத் தொடரை மிகவும் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கிறோம். குறைந்தது 30 நாட்களுக்காவது சபை நடத்தப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினோம், ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.

எனவே திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சபைத் தொடரைபுறக்கணிப்பதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் இன்று ஒருநாள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்போம் என்றார் அன்பழகன்.

காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில், வெறும் 8 நாட்கள் மட்டுமே சபையைக்கூட்டியுள்ளனர். இது மிகவும் அநியாயமானது. இதைக் கண்டித்து கோட்டை முன் 23ம் தேதி உண்ணாவிரதம்இருக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

அவசரம் அவசரமாக சட்டசபைக் கூட்டத்தை முடிப்பதன் மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது தமிழகஅரசு என பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X