For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: இன்று 45 பவுன் திருட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை புறநகரான நாகல்கேனி பகுதியில் ஒரு தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில்இருந்தவர்கள் மீது மயக்கப் பொடியைத் தூவிவிட்டு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாக சகட்டு மேனிக்கு கொள்ளைச் சம்பவங்களும்,கொலைகளும் நடந்து வருகின்றன. இதனால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஒரே இரவில் 10 இடங்களில் கொள்ளை நடந்தது. நேற்றுமாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் ஒரு பெண்மணியால் கடத்திச் செல்லப்பட்டார்கள்.

ஸ்ரீ பெரும்புதூரில் இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந் நிலையில்இன்று அதிகாலை சென்னை புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டை நாகல்கேனி பகுதியில் ஒரு கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது.

நாகல்கேனி பகுதியில் தோல் தொழிற்சாலை வைத்திருப்பவர் பஷீர் ரஹ்மான். இவரது வீட்டில் இன்று அதிகாலைஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்கப்பொடியைத் தூவினர்.

பின்னர் பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X