For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை உயர் நீதிமன்றத்தில் தீவிபத்து
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தீ உடனடியாகஅணைக்கப்பட்டதாகவும், இதனால் சேதம் அதிகம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அறை, கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் சோமையாஜியின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபோது சோமையாஜிஅறையில் இல்லை.
கும்பகோணம் தீவிபத்துக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிபத்துக்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னைஅரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிபத்துஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, July 27, 2004, 5:30 [IST]