இலங்கை அமைதிப் பேச்சு: இழுபறி நீடிப்பு
கொழும்பு:
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக நார்வே குழுவினர் விடுதலைப் புலிகளுடன் நடத்தியபேச்சுக்கள் வெற்றி பெறவில்லை என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் தலைமையிலான குழு கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழுவிடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியுள்ளது.
இந்தக் குழு அதிபர் சந்திரிகாவையும் சந்தித்தது.
இந் நிலையில் சந்திரிகாவின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீண்டும் பேச்சு தொடங்குவது தொடர்பாக புலிகளிடம் இருந்து உத்தரவாதம் ஏதும் பெறப்படவில்லை என நார்வே அமைச்சர்அதிபரிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடை பிடிப்பதாக புலிகள் உறுதிமொழிஅளித்துள்ளனர்.
அதே நேரத்தில் இடைக்கால நிர்வாகம் குறித்து பேச்சு நடத்த அரசு தயாராகவே இருப்பதாக நார்வே அமைச்சரிடம் அதிபர்தெரிவித்தார். புலிகளும் பேச்சு நடத்த முன் வருவார்கள் என்றே நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.