சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்களை போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக ஓராண்டுத் தடைவிதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதையடுத்து, சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்பிரபாகரன் தலைமையில் வழிகாட்டுக் குழு கூடியது.
கூட்டத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்புவழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக திரும்பப்பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளகட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திங்கள்கிழமை (இன்று) மாலை4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
இந் நிலையில் வழக்கறிஞர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்வேங்கடபதி கருத்து தெரிவிக்கையில்,
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்த இத்தகைய கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கருதுவதாகக் கூறினார்.