வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம்
சென்னை:
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை தடை செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடி காலவரையற்ற வேலை நிறுத்தம்,உண்ணாவிரதம், நீதிமன்றத்துக்குள் ஊர்வலம் என போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் ஜூலை 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளைவிதித்தது. அதன்படி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதோ, ஊர்வலம் போவதோ, நீதிமன்றப் புறக்கணிப்புமேற்கொள்வதோ கூடாது.
நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது. அவர்கள் மீது புகார் கூறக் கூடாது. அவர்களைப்புறக்கணிக்கக் கூடாது உள்பட 25 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் வழக்கறிஞர்கள்நீதிமன்றங்களில் பணியாற்ற ஒரு வருடம் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், புதியகட்டுப்பாடுகளை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.
மேலும் தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாகஈரோட்டில் கூடி வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கட்டுப்பாடுகள் நிறுத்திவைப்பு: நீதிமன்றம்
இதற்கிடையே, வழக்கறிஞர்களுக்கு வித்க்கப்பட்ட 25 கட்டுப்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகசென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை எதிர்தது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில்இறங்கியதால், வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டகட்டுப்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகம்தெரிவித்துள்ளது.