தீவிரவாதிகள்: டெல்லி அமெரிக்க தூதரகம் மூடல்
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகம் இன்று மூடப்பட்டது.
நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி ஆகிய அமெரிக்க நகர்களையும், இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூர்ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்கள், முக்கிய கட்டடங்கள் மற்றும் விஐபிக்கள் மீதும் அல்கொய்தா மற்றும் பிறதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய அரசுக்கு அமெரிக்க உளவுப் பிரிவினர் எச்சரிக்கைகொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்றுமூடப்பட்டது. இது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பாதுகாப்பு காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் தூதரகம் மூடப்படுகிறது. விசா தொடர்பாக தூதரகம் வரஅழைக்கப்பட்டவர்களுக்கு பிறிதொரு நாளில் நேரம் ஒதுக்கப்படும்.
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத் தீவிரவாத அமைப்பு, அல் கொய்தா, லஷ்கர்-ஏக-தொப்யா ஆகிய அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைச்சேர்ந்த மனித வெடிகுண்டுகள் இந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பெங்களூர், மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.