For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இராக்: இந்தியர்களை பாதுகாக்க முடியாது: யுஎஸ்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இராக்கில் பணி புரியும் இந்தியர்கள் உட்பட அனைத்து தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களுக்கும் தீவிரவாதிகள்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தர இயலாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இராக்கில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் உட்பட 7 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் புச்சர் கூறியதாவது:

இராக் ஒரு ஆபத்தான நாடு. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் சதாம் ஆதரவாளர்கள் அமெரிக்ககூட்டுப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவற்றைச் சமாளித்து அங்கு நிலைமையைச் சீர் செய்ய இராக் மக்களுடன் இணைந்து நாங்கள் பாடுபட்டுவருகிறோம். இந் நிலையில் அங்கு பணி பரியும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கோதீவிரவதிகளால் தாக்கப்படும் இராக்கியருக்கோ அமெரிக்காவால் பாதுகாப்பு தர இயலாது என்றார்.

இந் நிலையில் தீவிரவாதிகள் பிடியிலிருந்து இந்தியர்களை மீட்க குவைத் நிறுவனமும், இந்தியத் தூதரகங்களும்அதிகாரிகளும் மத்தியஸ்தரான துலாய்மி மூலம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X