For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒலிம்பிக்: இந்திய கொடியை ஏந்துகிறார் அஞ்சு
டெல்லி:
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்திச்செல்கிறார்.
ஒலிம்பிக் போட்டி வருகிற 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடக்கிறது. இந்தப்போட்டியில் இந்தியா 14 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. 75 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்தி செல்வார் என இந்தியஒலிம்பிக் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அஞ்சு ஜார்ஜ் கடந்த ஆண்டு நடந்த உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர் என்பதால் அவருக்குதேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் டென்னிஸ் வீரர் லியாண்டர்பயஸ் தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, August 6, 2004, 5:30 [IST]