இராக்: துலாய்மி, லாரி நிறுவனம் நேரடி பேச்சுவார்த்தை
பாக்தாத்:
இராக்கில் கடத்தப்பட்ட இந்திய பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குவைத் லாரி நிறுவன அதிகாரிகளும்,இராக் நாட்டு மத்தியஸ்தர் துலாய்மியும் குவைத் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் .
குவைத் மற்றும் கல்ப் லிங்க்ஸ் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் உட்பட 7 பேரை கடந்த 21ம்தேதி இராக் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இவர்களை விடுவிக்க, இராக்கில் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும், அமெரிக்க ராணுவநடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு இழப்பீடு வழங்கவும் குவைத் லாரி நிறுவனத்தை தீவிரவாதிகள்நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பெருமளவு பணத்தையும் எதிர்பார்க்கின்றனர். பிணைக்கைதிகளை மீட்க, தீவிரவாதிகள் கேட்கும்பணத்தை தர குவைத் லாரி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந் நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் துலாய்மியும், லாரி நிறுவன அதிகாரிகளும் இன்றுசந்தித்து, நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.