சர்ச்சை வழக்கறிஞர் கருப்பன் திடீர் கைது
சென்னை:
சர்ச்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கருப்பன் திடீர் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கருப்பன் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.நீதிபதிகள் மீது பகிரங்கமாக புகார் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி குறித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் விமர்சனம் செய்து அவர்உச்சநீதிமன்றத்திற்குப் புகார் அனுப்பினார். இதையடுத்து அவருக்கு கடுமையான எச்சரிக்கையைக் கொடுத்ததுஉச்சநீதிமன்றம்.
இந் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்கருப்பன். அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் குறித்து அவதூறாக பிரசுரித்திருந்தார். மேலும் சில நீதிபதிகள் மீதுஊழல் புகாரும் கூறியிருந்தார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, உயர்நீதிமன்றம் கருப்பன் மீது தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்புவழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ஏப்ரல் 17ம் தேதி, கருப்பனுக்கு 3 மாத சிறைத் தண்டனையை விதித்துநீதிபதிகள் கற்பகவிநாயகம், இப்ராகிம் கலிபுல்லா, அசோக் குமார் ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் கருப்பன். அங்கு கருப்பனின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டு விட்டது. இந் நிலையில் கருப்பனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.