காப்பாற்றியது வீராணம் அல்ல; ஜெவுக்கு திமுக பதில்
சென்னை:
சென்னை மக்களை குடிநீர் பஞ்சத்திலிருந்து காப்பாற்றியது வீராணம் தண்ணீர் அல்ல, நெய்வேலியைச் சுற்றிப்போடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்க் கிணறுகள்தான் என்று தி-முக பொருளாளர் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு சென்னை -நகரை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்குப் போகவிருந்த நிலையைமாற்றி, சென்னை மக்களைக் காப்பாற்றியது வீராணம் தண்ணீர்தான் என்று -முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி மறுப்பு தெ-ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆற்காடு வீராசாமியின் அறிக்கை:வீராணம் ஏ-ரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. இந் -நிலையில் இந்த அளவுக்குத் தண்ணீரை எப்படி எடுத்துசென்னைக்கு அனுப்ப -முடியும் என்பதை -முதல்வர் விளக்க வேண்டும்.
கணக்கு தணிக்கை அதிகா-ரியின் அறிக்கை விவகாரம் குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தன்னைப்பற்றியும், தனது ஆட்சி நிர்வாகத்தைப் பற்றியும் புகழ்ந்து கொள்ளும் விதமாக, புதிய வீராணம் திட்டத்தின் -மூலம்சென்னை மக்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றி விட்டதாக ஜெயலலிதா தம்பட்டம் அடிக்கிறார்.
சென்னைக்கு வந்த குடிநீர், வீராணம் ஏ-ரியிலிருந்து கொண்டு வரப்பட்டதல்ல. நெய்வேலியைச் சுற்றிலும் தமிழகஅரசால் போடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ் குழாய்க் கிணறுகளிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர்தான் அவை. இந்ததண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.