இராக்: பேச்சுவார்த்தையில் பின்னடைவு
குவைத் :
இராக்கில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் உட்பட 7 பிணைக்கைதிகளை மீட்பதற்கு தீவிரவாதிகளின் பிரதிநிதியாகச்செயல்படும் அல் துலாய்மியுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலிருந்து குவைத் லாரி நிறுவனம் விலகியுள்ளது.
அதே நேரத்தில் தீவிரவாதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அந் நிறுவனத்தின் செயதித் தொடர்பாளர்ராணா அபு சைனே விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக அல் துலாய்மியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தையில், அல் துலாய்மி தீவிரவாதிகளின் அதிகாரப் பூர்வமானபிரதிநிதி இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம்.
இந்த விஷயத்தில் அவரால் செய்யக் கூடியது எதுவுமில்லை. தீவிரவாதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தநாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில், தீவிரவாதிகளுக்குஉண்மையாகவே அக்கறை இருக்குமேயானால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் நிறுவனத்தின்பிரதிநிதிகளை இராக் அனுப்பத் தயாராக இருக்கிறோம் என்றார்.
பணயத் தொகையாக பெருமளவில் பணத்தை தீவரவாதிகள் கேட்பது தான் விவகாரமாகியுள்ளது. குவைத்நிறுவனம் அவ்வளவு பணத்தைத் தரத் தயாராக இல்லை. இதனால் துலாய்மியைத் தவிர்த்துவிட்டுதீவிரவாதிகளுடன் பேச அந் நிறுவனம் விரும்புகிறது. இதை தீவிரவாதிகள் ஏற்பார்களா என்று தெரியவில்லை.
அதே நேரத்தில் தீவிரவாதிகள் அமிதாப்பச்சன் மற்றும் தர்மேந்திரா உள்ளிட்ட இந்தி நடிகர்களின் தீவிர ரசிகர்கள்என்றும், அவர்கள் கோரிக்கை வைத்தால் ஒருவேளை இந்தியர்களை அவர்கள் விடுவிக்கலாம் என்றும் துலாய்மிகூறியுள்ளார்.
இதையடுத்து தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு இந்த நடிகர்களுக்கு கடத்தப்பட்டவர்களின்குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அமிதாப்பச்சன் கூறுகையில், நான் வேண்டுகோள்விடுக்கத் தயார், ஆனால், இதனால் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளில் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாதுஎன்று அஞ்சுகிறேன். மத்திய அரசு கேட்டுக் கொண்டால் நிச்சயம் தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுப்பேன்என்றார்.