For Daily Alerts
Just In
ஜெர்மன் ஜெஸ்: 7வது முறை ஆனந்த் சாம்பியன்
மைன்ஸ்:
ஜெர்மனியில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் 7-வது முறையாக சாம்பியன்பட்டம் வென்றார்.
ஜெர்மனியில் நடந்த மைன்ஸ் செஸ் இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான விஸ்வநாதன் ஆனந்த், 3-ம்நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸ் ஷிரோவுடன் மோதினார்.
8 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் 6-வது சுற்றில் ஆனந்த் 4-2 என்ற புள்ளி கணக்கில் முன்னணி பெற்றார். 7-வதுமற்றும் 8-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால் ஆனந்த் 5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை மீண்டும்கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஆனந்த் 7-வது முறையாகவும், தொடர்ந்து 3வது முறையாகவும் சாம்பியன் பட்டம் பெறுகிறார்.
இந்த ஆண்டில் டார்ட்முன்ட் மற்றும் கோருச் சர்வதேச செஸ் போட்டிகளிலும் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, August 10, 2004, 5:30 [IST]