For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் அமைதிப்பூங்காவா? வாசன் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடக்கும்போது, தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக முடியும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்புக்கு திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரவர் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் தவறு இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிக அளவில் கொலை, கொள்ளைநடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும்போது தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாகமுடியும்?

நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அவர்கள் மீது போலீசார்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

வாசன் மாற்றப்பட மாட்டார்: சல்மான் குர்ஷித்

தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.வாசனை மாற்றும் திட்டம் ஏதும் கட்சி மேலிடத்திடம் இல்லைஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான சல்மான் குர்ஷித் கூறினார்.

சென்னை வந்துள்ள சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.வாசன் மத்திய அமைச்சாரகப்போகிறாரா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது. மத்திய அமைச்சர் பதவியை தருவது பிரதமரின்உரிமை என்று என்னிடம் வாசன் கூறியுள்ளார்.

ஒருவேளை வாசன் விரும்பினால் அவருக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம். இருப்பினும்இப்போதைக்கு கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டம் கட்சி மேலிடத்தில் இல்லை.

கட்சியை தமிழகத்தில் அடிமட்ட அளவிலிருந்து வலுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X