முகம்மது அலியின் காவல் 27ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள முகம்மது அலி, சங்கர், ராமசாமி சாது ஆகியோரின் சிறைக்காவல் வருகிற 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடியில் கைதாகியுள்ள டி.ஐ.ஜி. முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர்தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கைதான மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி.அதிகாரி ராமசாமி சாது ஆகியோரது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து 3 பேரும் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போதுஅவர்களிடம் நடத்திய விசாரணை விவரங்கள் அடங்கிய கேஸ் டைரியை சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல்நீதிபதி அருள் தாஸிடம் ஒப்படைத்தார்.
அதில், 3 பேர் மீதும் 45 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், 40 பேர் வரை விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3 பேரின் காவலையும் வருகிற 27ம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதிஉத்தரவிட்டார்.