For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுக் கடைகளை மூட ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு மதுக்கடைகளை உடனஐயாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி வைக்க, ஆளுநர்கள் விருந்து அளித்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.தமிழகத்தில் மட்டும் முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றி வைத்தார். ஆனால் உரை நிகழ்த்தவில்லை. ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டியை காண ஆளுநர் ராம் மோகன்ராவ் போய் விட்டார்.

சுதந்திர தினத்தன்று இவ்வாறு நடந்தள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

கிராமந்தோறும் சாராயக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதா, இப்போது நமது கிராமம் என்ற புதியதிட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்த திட்டம் புதியது அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே நிதி நிலைஅறிக்கையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாராயக் கடைகளை தாராளமாக திறந்து, ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கிராமப்புறவருமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு, இப்போது வெறும் 200 கோடி ரூபாய் செலவில் கிராமங்களையெல்லாம்முன்னேற்ற போகிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

கிராமங்களை முன்னேற்ற வேண்டுமென்று இந்த அரசு விரும்புமானால் அரசு மதுக் கடைகளை முதலில் மூடவேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X