For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா நாளை சென்னை வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தபால் தலையை வெளியிடுவதற்காக அகில இந்திய காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் நினைவு தபால் தலையை வெளியிடுவதற்காக சோனியா நாளைசென்னை வருகிறார். அவரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது.

இந்த வரவேற்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் விழா நடைபெறுகிறது. தபால்தலையினை சோனியா வெளியிட அதை திமுக தலைவர் கருணாநிதி பெற்றுக் கொள்கிறார். மக்களவை சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜி, இந்து ராம், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில்பங்கேற்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X