For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூரிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக1.5 டி.எம்.சி. நீரைத் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சம்பா பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடஆணையிட்டேன்.

இந் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் விவசாயப் பணிகளை விரைவில்மேற்கொள்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீரைத் திறந்து விடும்படி கடைமடை விவசாயிகள்கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 1.5 டி.எம்.சி. (விநாடிக்கு 18,000 கன அடி)தண்ணீரை 6 நாள்களுக்குத் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X