பயஸ்-பூபதி தோல்வி: வெண்கல கனவு தகர்ந்தது
ஏதென்ஸ்:
ஏதென்சில் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடிதோல்வியடைந்தது.
இதனால் டென்னிசில் வெண்கலம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. குரோஷியாவின்மாரியோ அன்சிக் மற்றும் இவான் ஜும்பிக் ஜோடியிடம் 5-7, 6-4, 14-16 என்ற செட் கணக்கில்பயஸ்-பூபதி ஜோடி தோற்றது.
400 மீட்டர் ஓட்டம்: பினு தேர்வு
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கே.எம். பினு அரையிறுதிக்குத்தகுதி பெற்றார். அவர் இந்த தூரத்தை 45.48 நொடிகளில் கடந்தார். இதன் மூலம் அவர் புதிய தேசியசாதனையையும் படைத்துள்ளார்.
வட்டு எறிதலில் தோல்வி:
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹர்வந்த் கெளரும், சீமா அந்திலும்தோல்வியைத் தழுவினர்.
வில் வித்தையில் தோல்வி:
ஒலிம்பிக் காலிறுதிக்குத் தகுதி பெற இன்று நடந்த வில் வித்தைப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம்இந்திய ஆண்கள் அணி தோல்வியைத் தழுவியது.
ஹாக்கியில் தோல்வி:
இன்று நடந்த குரூப் பி ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய 2-1 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியாஇழந்தது.
நாடு திரும்பினார் வெற்றி வீரர்:
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற முன்னாள்ராணுவ மேஜர் ரத்தோர் (34) இன்று டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மிக உற்சாகமானவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி விஜ்ஜை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரத்தோர்.