For Daily Alerts
Just In
நாயுடுவிடம் உமா பாரதி ராஜினாமா கடிதம்
போபால்:
கர்நாடகத்தில் நடந்த கலவரம், கொலை வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியைக் கைதுசெய்ய ஹூப்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க.தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுளளார்.
முதலில் இந்த வழக்கில் தனக்கு சம்பந்தமில்லை என்றும், ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் உமாகூறிக் கொண்டிருந்தார். ஆனால், கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்கள் மத்தியஅமைச்சர்களாக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. போராட்டம்நடத்தி வருகிறது.
இதைச் சுட்டிக் காட்டி காங்கிரஸ் கேள்வி எழுப்பியதையடுத்து இன்று உமா பாரதி தனது ராஜினாமாகடிதத்தை நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.
ஒரு முதல்வர் ராஜினாமா செய்வதாக இருந்தால் அதை மாநில கவர்னருக்குத் தான் அனுப்பவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, August 21, 2004, 5:30 [IST]