ஒலிம்பிக்: தங்கம் வெல்வாரா அஞ்சு ஜார்ஜ்?
ஏதென்ஸ்:
மிகவும் எதிர்பார்த்த வீரர்கள் எல்லாம் ஏமாற்றி விட்ட நிலையில், எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான அஞ்சு ஜார்ஜ் இன்றுகளமிறங்குகிறார்.
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி, இந்திய ஹாக்கி வீரர்கள் எல்லாம் ஏமாற்றம் தந்து விட்டனர். யாரும்எதிர்பாராத ரத்தோர், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்று, இந்திய மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார்.
இந் நிலையில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான அஞ்சு ஜார்ஜ், நீளம் தாண்டும் போட்டியில் இன்று கலந்து கொள்கிறார். இன்றையபோட்டியில் இவர் வெற்றி பெற்றால் வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அஞ்சு கலந்துகொள்ளும் ஏ பிரிவில்தான், அமெரிக்காவின் மரியன் ஜோன்ஸ், ரஷ்யாவின் இரினா சிமக்னா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இருவரும் 7.10 மீட்டர் வரை தாண்டக்கூடியவர்கள். ஆனால் நமது அஞ்சு ஜார்ஜ், 6.71 மீட்டர்தான் இது வரை தாண்டியிருக்கிறார்.ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து, அஞ்சு ஜார்ஜ் பதக்கம் வெல்வார் என்று இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல்:
இதற்கிடையே, 5வது இடத்துக்கான போட்டியில் தகுதி பெறுவதற்காக இந்திய ஹாக்கி அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடஇருக்கிறது.