ஒலிம்பிக்ஸ்: நீளம் தாண்டுதலில் அஞ்சு தோல்வி
ஏதென்ஸ்:
நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டஅஞ்சு பாபி ஜார்ஜ் தோல்வியைத் தழுவினார்.
உலக தடகள சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கேரளத்தைச் சேர்ந்த அஞ்சுவுக்குமுதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் பரிசு கொடுத்தார். மேலும்ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கும் தமிழக அரசு பெருமளவில் அஞ்சுவுக்கு உதவியது.
இந் நிலையில் நேற்றிரவு நடந்த நீளம் தாண்டும் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் ரஷ்யவீராங்கனைகள் பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
6.83 மீட்டர் தாண்டிய அஞ்சு ஜார்ஜ் ஆறாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ரிலே போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு:
இதற்கிடையே பெண்களுக்கான 400 மீட்டர் ரிலே ஓட்டப் போட்டியில் யாரும் எதிர்பாராதவகையில் இந்திய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.மல்யுத்தத்திலும் தோல்வி:
60 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுசில்குமார் கியூபா வீரர் யாண்டிரோபெட்டிடம் 0-3 என்ற புள்ளி கணக்கில்தோல்வி அடைந்தார். 74 கிலோ பிரிவில் இந்திய வீரர் சுஜித் மன் கியூபா வீரர் ஐவானிடம் 0-6 என்ற புள்ளிக் கணக்கில்தோல்வித் தழுவினார்.