For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதானவர்கள் மருத்துவனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

Jayalakshmiஜெயலட்சுமி விவகாரத்தில் கைதான 3 பேரும் நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகை வியாபாரி முருகவேல்ஆகியோரை சிவகாசி போலீசார் கைது செய்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க சிவகாசி மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.

அப்போது மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள், உடல்நிலை சரியில்லை, சிறையில் அடைக்க வேண்டாம்,மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடுங்கள் என்றனர். ஆனால் மாஜிஸ்திரேட், அதை சிறை அதிகாரிதான்முடிவு செய்ய வேண்டும் என்று கூறி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் அவர்கள் சிறைஅதிகாரியிடம், நெஞ்சு வலிப்பதகாக் கூறினர். இதனால் அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாஜகான் பதிலளரிக்க மறுத்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X