For Daily Alerts
Just In
கும்பகோணம்: உளவியல் நிபுணர் ஆலேசனை
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகமிஷன் உயிர் பிழைத்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தியது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிறுவர்கள், அவர்களது பெற்றோர்களிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் உயிர் பிழைத்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிகளான சரஸ்வதி மேல் நிலைப்பள்ளி, சரஸ்வதிதொடக்கப் பள்ளி, புனித மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றிற்கு சென்று பார்வையிட்டார்.
இதற்கிடையே, மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நீதிபதி குழுவில் இடம் பெற்றுள்ள மன நலமருத்துவர் டாக்டர் விஜயன் உளவியல் ஆலோசனைகளை கொடுத்து வருகிறார்.
Story first published: Tuesday, August 31, 2004, 5:30 [IST]