இராக்: 12 நேபாள நாட்டினர் தலை துண்டிப்பு
துபாய்:
இராக்கில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 12 நேபாள நாட்டினரும்தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அன்ஸர்-அல்-சுன்னா என்ற தீவிரவாத அமைப்பு தனது இணையத் தளத்தில் இந்தத் தகவலைவெளியிட்டுள்ளது. இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.
இவர்களைப் பிடித்துச் சென்ற தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை இவர்களது வீடியோவைவெளியிட்டனர். அப்போது பேசிய பிணைக் கைதிகள், தாங்கள் வேறு வேலைக்கு வந்ததாகவும்,அமெரிக்கப் படைகள் பொய் சொல்லி தங்களை இராக்கில் பணி செய்ய நிர்பந்தித்துவிட்டதாகவும்கூறியிருந்தனர்.
இந் நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நிருபர்கள் கதி?:
இதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட இரு பிரஞ்சு நிருபர்களைக்காப்பாற்ற அந் நாட்டு அரசு தீவிர முயற்சிகள் எடுத்துள்ளது.
பள்ளிகளில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் தலையில் முக்காடு அணிந்து வருவதற்கு பிரான்ஸ்தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்காவிட்டால் இரு நிருபர்களையும் தலையை வெட்டிக்கொல்வோம் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் எகிப்து உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் உதவியோடு நிருபர்களை மீட்க பிரான்ஸ்முயன்று வருகிறது.
இந்தியர்கள் நிலை?:
இந் நிலையில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் இந்தியர்கள் 3 பேரும் பத்திரமாக இருப்பதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குவைத் லாரி நிறுவனத்திடம் கோரிவருவதாகவும் தெரிவித்துள்ளது.